ArutTamil Arivu Salai

அருட்தமிழ் அறிவுச்சாலைக்கு வரவேற்கிறோம்

ஞானத்தின் மொழி

இன்றே எங்களுடன் இணைந்து தமிழ் மொழியைக் கற்க ஒரு பயணத்தைத் தொடங்குங்கள்

அருட்தமிழ்ப் பள்ளிக்கு தங்களை வரவேற்கின்றோம். உலகின் பழமையான செம்மொழியாம் தமிழைக் கற்றறிவோம்.

அருட்தமிழ் அறிவுச்சாலையில் நமது தமிழ் மொழியை மீட்டு மேம்படுத்தி மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில்  அனைவரும் கைகோர்த்து வலுசேர்ப்போம். இச்சாலையில் ஆசிரிய பெருமக்கள், எங்களால் கட்டமைக்கப்பட்ட சிறப்பான பாடத்திட்டத்தின் மூலம் விரிவான மொழிப் பயிற்சியை வழங்குகிறார்கள். கற்றல் திறனில் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்குத் தக்கவாறும், தமிழ் மொழியறிவில் அனைத்து படிநிலைகளில் உள்ளவர்களுக்கு ஏற்றவாறும் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏன் தமிழ் கற்க வேண்டும்?

கமில் ஸ்வெலேபில் எனும் மொழியறிஞர் கூறுகிறார், “தமிழ்தான் உலகில் கடைசியாக எஞ்சியிருக்கும் செம்மொழி நாகரிகம்”. கலை, பண்பாடு, நாகரிகம் மற்றும் அனைத்தும் ஒரு மொழியிலிருந்தே உருவாகின்றன. எனவே உலகின் தொன்மையான மொழியாகியத் தமிழைக் கற்றுக் கொள்வதும், அம்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் நமது கடமையாகும்.

ஞானத்தின் மொழி

  1. தமிழ் மொழியின் பெருமைகளை மீட்டெடுக்கவும், அடுத்துவரும் தலைமுறைக்கு நன்கு கற்பித்து அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளைச் செம்மைபடுத்தவும் ஊக்கப்படுத்தி வழிகாட்டுவோம்.
  2. அமெரிக்க நாட்டில் வாழும் குழந்தைகளுக்கு முத்தமிழ் எனப்படும் இயல்,  இசை,  நாடகம் ஆகியவற்றைக் கற்பிக்கும் வகையில் செயல்பாட்டை முன்னெடுப்போம்.  
  3. தமிழர்களின் நற்பண்புகளான  நல்லொழுக்கம், அறிவியல், மெய்யியல், வானவியல் சார்ந்த அறிவு, பண்டைக்கால உலக வணிகம், மருத்துவம், வேளாண்மை போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கும் கற்பிக்க வேண்டும்.
எங்களைப் பற்றி

அருட்தமிழ் அறிவுச்சாலை:

அருட்தமிழ் அறிவுச்சாலை தமிழ் மொழியைப் பயிற்றுவைப்பதற்காக  அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மை நிறுவனமாகும். தமிழ் கற்றலை அனைவரும் அணுகக்கூடியதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். AVANT தேர்வுக்கான இலவசப் பயிற்சி கொடுக்கப்படும்  (*தகுதி பெற்ற மாணவர்கள்).

திறனாளருடன் கற்றல்

உங்களின் வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆர்வமுள்ள மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

LSRW திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

விரிவான, நேரடிப் பயிற்சிகள் மூலம் உங்கள் மொழித் திறனை மேம்படுத்துங்கள்.

வார இறுதி வகுப்புகள்

உங்களின் அட்டவணைக்கு ஏற்றவாறு நெகிழ்வான கற்றல் விருப்பங்களை தேர்ந்தெடுங்கள்.

உலகத் தரநிலை

சர்வதேச தரத்துடன் கூடிய பயிற்சி மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம்

அருட் தமிழ் அறிவுச் சாலை மூலம் தமிழ் மொழியின் அழகைக் காணவும்.

தமிழ் கற்பதில் ஆர்வம் உள்ளவரா? சிறந்த மொழி வாய்ப்புகளுக்காக உங்கள் பயனாளர்களை இணைக்க விரும்புகிறீர்களா அல்லது உங்களின் மொழித் திறனை மேம்படுத்த ஆர்வம் இருந்தால் அருட்தமிழ் அறிவுச்சாலையில், அடிப்படை முதல் மேம்பட்ட நிலைகள் வரை, உங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு பாடத் திட்டங்களை நாங்கள் வழங்குகிறோம். கற்று பயன் பெறுங்கள்.

நிபுணரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

பயிற்றுனர்கள்: ஆசிரியர்கள் உங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி பயிற்றுவிப்பதால்  எளிதில் இலக்கை அடைவீர்கள். AVANT தேர்வுக்கு தகுதி பெற்ற மாணவர் பயிற்சி மற்றும் உதவி

விரிவான பாடத்திட்டம்:  அடிப்படை மொழிக் கற்றல் முதல்  இலக்கணம் வரை அனைத்தும் எங்களின் பாடதிட்டத்தில் அடங்கும். 

ஊடாடும் கற்றல்:  LSRW பயிற்சி மூலம் நடைமுறைப் பயன்பாட்டை வலியுறுத்தும் ஆற்றல்மிக்க கற்றல் சிறப்பானதாகும்.

நெகிழ்வான அட்டவணை:  உங்களின் கால நெருக்கடியான வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் நாங்கள் நெகிழ்வான நேர அட்டவணையை வழங்குகிறோம். வார இறுதி நாட்களில் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும்

error: Content is protected !!
Let's chat on WhatsApp

Hello! Thank you for contacting Arut Tamil Arivu Salai. We are dedicated to providing high-quality Tamil language education for all levels. How can we assist you today?

11:56